19. திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 19
இறைவன்: ஏகாம்பரேஸ்வரர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : மா
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : ஏகாலியர்
அவதாரத் தலம் : காஞ்சிபுரம்
முக்தி தலம் : காஞ்சிபுரம்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை - சுவாதி
வரலாறு : தொண்டை நாட்டில் காஞ்சிபுரத்தில் ஏகாலியர் குலத்தில் அவதரித்தார். சிவனடியார்கள் குறிப்பறிந்து அவர்களுக்கு ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தார். சிவபெருமான் ஒருநாள் முதியவர் உருவில் வந்து அவரிடம் தன் கந்தை ஒன்றைக் கொடுத்து மாலைக்குள் இதனைத் துவைத்துக் கொடுப்பாயாக என்று சொல்லி நீராடி வரச் சென்றார். நாயனாரும் துணியைத் துவைத்துக் காய வைப்பதற்குள் மழை பொழிய ஆரம்பித்தது. அடியார் குளிரால் வருந்துவாரே என்றும் தம் தொண்டில் பிழை ஏற்பட்டதே என்றும் நினைத்து துணி துவைக்கும் கல்லில் தம் தலையை மோத முற்பட்டார். அப்போது இறைவனது கரம் அக்கல்லில் தோன்றி அவரைத் தடுத்தாட்கொண்டது. பெருமான் விசும்பில் தோன்றி அவருக்குக் காட்சியளித்தார். இவருக்கென்று தனிக் கோயில் காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் உள்ளது (முத்தீஸ்வரர் கோயில்)
முகவரி : அருள்மிகு. ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501 காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. ஜெ.நாகராஜன் அலைபேசி : 9894149266, திரு.அண்ணா.சச்சிதானந்தம் அலைபேசி : 9444999300
தொலைபேசி : 044-27222084

இருப்பிட வரைபடம்


கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச் 
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத் 
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு 
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை

- பெ.பு. 1207
பாடல் கேளுங்கள்
 கந்தை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க